search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
    X

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம் 

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

    • வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 28-வது முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை வர வேற்கும் விழா, சி.எஸ்.ஐ மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் பென்சர் பிராதாப்சிங் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஞானம், அறிவு, புத்தி குறித்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை, உண்மையானவை.கல்வி யின் முக்கியத்துவத்தை அறிந்து எதிர்கால நலன் கருதி நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற மாணவ-மாண விகள் முன்வர வேண்டும்.

    தற்போது கணிணி படிப்பிற்கு அதிக முக்கிய த்துவம் உள்ளது. இதற்கு இடம் கிடைப்பது அரிது. முந்தைய காலத்தில் கலை மற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதுதான் கல்வி. வாழ்க்கையில் முன்னேற கல்வி இருந்தால் மட்டுமே முடியும்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பினை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.

    மாணவ, மாணவிகள் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளை படைக்க வேண்டும். நாட்டிற்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டிற்கும் பயன் உள்ளவர்களாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர்மகேஷ், நிர்வாக செயலாளர் வக்கீல் தினேஷ், சி.எஸ்.ஐ டயோ சிசன் வளர்ச்சி திட்ட இயக்குனர் லாரன்ஸ், செண்பக ராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தாளா ளர் எபனேசர் ஜோசப், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி நிதி காப்பாளர் பொன் சாலமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தலைமை பேராசிரியர் டாக்டர்நாக்சன் நன்றி கூறினார்.

    Next Story
    ×