search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
    X

    புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

    • நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சடையன்குழி சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம் நோக்கி சென்றார்
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சல் பிரேம்நாத் (வயது 43).

    இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சடையன்குழி சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம் நோக்கி செல்லும்போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

    எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஏஞ்சல் பிரேம்நாத் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிள்ளியூர் வேங்கோடு பகுதியைச் சேர்ந்த அருளப்பன் மகன் ஆஷிக் லால் (22) காயத்துடன் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதி வலியவிளை யைச் சேர்ந்தவர் தேவகுமார் (40), தொழிலாளி. இவர் புதுக்கடை சாலையில் நடந்து சென்ற போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவகுமார் பலத்த காயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது தொடர்பான புகா ரின் பேரில் புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேங்காப்பட்டணம் அம்சி பகுதியை சேர்ந்த ஜெகன் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×