என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடசேரியில் வீட்டை உடைத்து 4½ பவுன் நகை - ரூ.10 ஆயிரம் கொள்ளை
- சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி (வயது 56).
இவர் தற்பொழுது குலசேகரபட்டினம் கோவி லுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். நேற்று மாலை வீட்டிலிருந்து சாந்தி பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்டுவதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி அவரது மகன் முகேஷ் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேல் கூரை வழியாக ஏறி குதித்து தப்பி ஓடினார்.
இதையடுத்து அவரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவை உடைத்து அதிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்று இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீ சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது .
சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன்,மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்