என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே மினி பஸ் கண்டக்டர் லாரி மோதி பலி
- மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
- இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
கன்னியாகுமரி :
தக்கலை அருகே மருவூர் கோணம் பகுதியைச் சேர்ந்த வர் அஜிஸ் (வயது 26), மினி பஸ் கண்டக்டர்.
இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு இந்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.அஜிஸ் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டி லிருந்து புறப்பட்டார்.திக்கணங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மினி பஸ்சில் வேலைக்கு சென்றார்.நேற்று இரவு வேலை முடிந்து அஜிஸ்வீட்டிற்கு செல்ல தயாரானார். தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு முளகு மூடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி அஜிஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தூக்கி வீசப் பட்ட அஜிஸ் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை சிகிச்சைக் காக தக்கலை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக அஜிஸ் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை அஜிஸ் பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து அவரது மனைவி இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.
லாரி டிரைவர் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான அஜிசின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்