என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களிமார் விஷ்ணு கோவிலில் மீண்டும் உண்டியல் கொள்ளை
- திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் களிமாரில் உள்ளது மகாவிஷ்ணு கோயில்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோயில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை அந்த வழியாக சென்று பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் விரைந்து சென்று கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோயில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இது கோயில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுபோல் மர்ம நபர் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை எடுத்து சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்