search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் பூக்கள் விலை உயர்வு
    X

    நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் பூக்கள் விலை உயர்வு

    • தோவாளை சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
    • விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலர் சந்தை தோவாளையில் உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய் மொழி, குமாரபுரம், பழவூர், ராதாபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ வும், சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர்ரோஸ், தென்காசி புளியங்குடி அம்பாச முத்திரம் திருக்கனங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை மற்றும் துளசியும். தோவாளை, ராஜாவூர், மருங்கூர், செண்பகராமன் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து சம்பங்கி, கொழுந்து, கோழி கொண்டை, கனகாம்ப ரம், அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்களும் தோவாளை சந்தைக்கு வருகின்றன. இங்கிருந்து மாநிலம் முழுவதும் மட்டுமின்றி மாவட்ட முழுவ தற்கும் பூக்கள் விற்பனையாகி வருகிறது . இந்த நிலையில் நாளை (14-ந் தேதி) சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு இன்று விலை போனது. மல்லிகைப்பூ ரூ.ஆயி ரத்துக்கும் அரளி ரூ.200-க்கும் விற்கப்பட்டது. சம்பங்கி ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.60, சிவப்பு கிரோந்தி ரூ.60 ரோஜா பாக்கெட் ரூ.20, பட்டர் ரோஸ் ரூ.100, மரிக்கொழுந்து ரூ.150, கோழிப் பூ ரூ.80, கனகாம்பரம் ரூ.400, தாமரை ரூ.5, என அனைத்து பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×