search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.54 லட்சத்தில் நவீன கருவி - சென்னைக்கு அடுத்து குமரி மாவட்டத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது
    X

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.54 லட்சத்தில் நவீன கருவி - சென்னைக்கு அடுத்து குமரி மாவட்டத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது

    • 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம்
    • நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்கள்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது.

    ரூ.54 லட்சத்தில் நவீன கருவிஇங்கு அறுவை அரங்குகள் மற்றும் சிறப்பு துறைகளான இருதயவியல்துறை, சிறுநீரகவியல் துறை, டயலிசிஸ் பகுதி, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற பகுதிகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை பிரிவை மேம்படுத்த மத்திய நுண்கிருமி நீக்கும் பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்மா ஸ்டெரிலைசர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது.

    இந்த கருவி மூலம் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யும் கருவியின் உதிரி பாகங்கள், ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவிகள், மயக்கவியல் துறை கருவிகள், மற்றும் நவீன அறுவை சிகிச்சை கருவிகளான எண்டாஸ் கோப்பி, லேப்பராஸ் கோப்பி கேமராக்கள், வெண்டிலேட்டர் உதிரி பாகங்கள் போன்ற கருவிகளை 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம். அதாவது, ஹைட்ரஜன் பொராக்சைடு மற்றும் பிளாஸ்மா தொழில் நுட்பத்தில் கிருமிகளை நீக்கம் செய்து மறுபடியும் பயன்படுத்த முடியும்.

    பொதுவாக இந்தகருவி கார்ப்பரேட் மருத்துவமனையில் மட்டும்தான் நிறுவப்பட்டிருக்கும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு பிறகு கன்னியாகுமரி மருத்துவமனையில் தான் தற்போது நிறுவப்படுள்ளது.

    மேலும் இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் கருவிகளை கிருமி நீக்கம் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 3 நவீன ஆட்டோ கிளைவ் எயந்திரங்களையும், நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்களையும் வாங்கி வழங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கருவி நிறுவும் நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயாஸ், கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர்டு ஜான்சன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×