search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகள்
    X

    குமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகள்

    • மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழங்கினார்
    • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது

    நாகர்கோவில், நவ.8-

    வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படும் தீபாவ ளியை விபத்தில்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தீயணை ப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீய ணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டார் ஏழகரம் அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்ய குமார் பேசியதாவது:-

    இந்த தீபாவளி விபத்தில்லா தீபாவளியாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு கடைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

    பட்டாசு கடைகள் விதிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உரிமம் வழங்கப் பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் .

    பட்டாசு அடுக்கி வைக்கும் ரேக் உராய்வி னால் தீப்பொறி ஏற்படக் கூடியதாக இருக்கக் கூடாது. தயாரிப்பா ளர்களின் லேபில்களுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் .உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசு களை விற்பது சட்டப்படி குற்றமாகும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு சேமித்து வைப்பது குற்றமாகும்.

    இதே போல பொதுமக்க ளும் விபத்தில்லா தீபாவளி யாக அமைய ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது இறுக்க மான ஆடைகளை அணிய வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறு வர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளி யில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.

    வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதி யில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மருத்துவ மனை, திரையரங்குகள், பொது மக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்காதீர்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி க்க கூடாது.

    பட்டாசுகளை சிறு வர்கள் கையில் எடுத்து விளை யாட அனுமதிக்க வேண்டாம் . உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    Next Story
    ×