search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
    X

    கோப்பு படம் 

    குழித்துறையில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

    • பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    குழித்துறை மேற்கு ெரயில் நிலையம் அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.

    எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×