என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேலகிருஷ்ணன்புதூர் அருகே புதிய சாலை அமைக்கும் பணி
Byமாலை மலர்21 Aug 2022 7:26 AM GMT
- ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
- நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை புதிய சாலை
கன்னியாகுமரி:
மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை செல்வதற்கு பாதை வசதி சரியாக இல்லாமல் இருந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேல கிருஷ்ணன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனிடம் ஒரு புதிய சாலை உருவாக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் துரித நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் ராஜகுமாரி கலைக்கண்ணன், மகேஷ் பாபு, சிவக்குமார், சுபாசெல்வராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X