search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சுசீந்திரம் செங்கட்டி பாலத்தில் முதியவர் பிணம் - போலீஸ் விசாரணை
    X

    சுசீந்திரம் செங்கட்டி பாலத்தில் முதியவர் பிணம் - போலீஸ் விசாரணை

    • செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
    • .இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.

    இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் வாயிலிருந்து நுரை வந்திருந்தது.

    மேலும் அவரது நெற்றி மற்றும் கண் பகுதியில் காயங்கள் இருந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×