என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே பஸ் மோதி மூதாட்டி பலி
- இன்று காலை பரிதாப சம்பவம்
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி யில் இருந்து நெல்லைக்கு அரசு சொகுசு பேருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.பஸ்ஸை டிரைவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.
வெள்ளமடம் பகுதியில் பஸ் சென்ற போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 85 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மீது பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பலியான மூதாட்டி வெள்ள மடம் பகுதியைச் சேர்ந்த செண்பக வடிவு (வயது 85) என்பது தெரிய வந்தது.
அவர் அந்த பகுதியில் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது பஸ் மோதி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






