search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி, இஞ்சியை தொடர்ந்து குமரியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை
    X

    தக்காளி, இஞ்சியை தொடர்ந்து குமரியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை

    • ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் 180 முதல் 200-க்கு விற்பனையானது.
    • இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம், மேட்டுப்பா ளையம், ஒசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு வரை விற்கப்பட்டது.

    தற்போது கிலோ ரூ.20 குறைந்து இன்று ரூ.120-க்கு விற்பனையானது.

    தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் 180 முதல் 200-க்கு விற்பனையானது.

    இதேபோல் இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்கப்பட்டது. பூண்டு ரூ.150-க்கு விற்பனையானது. தக்காளி, இஞ்சி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே தக்காளி பயன்பாட்டை குறைத்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பீன்ஸ், கேரட், மிளகாயின் விலையும் அதிகமாகவே காணப்படுவதால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கான அளவை குறைத்து வருகின்றனர்.

    வழக்கமாக தக்காளி, சின்ன வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி வந்த நிலையில் தற்போது கிராம் கணக்கில் வாங்க தொடங்கி யுள்ளனர். நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனை காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    பீன்ஸ் கிலோ ரூ.100, கேரட் ரூ.70, மிளகாய் ரூ.100, நாட்டுக் கத்தரிக்காய் ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.50, பீட்ரூட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.40, தடியங்காய் ரூ.30, சேனை ரூ.60-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் வருகிறது. மக்களின் தேவை அதிகரித்து உள்ளதால் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×