search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்மனையில் குப்பை வாகனம் சிறை பிடிப்பு
    X

    பொன்மனையில் குப்பை வாகனம் சிறை பிடிப்பு

    • பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
    • குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான குலசேகரம் பேரூராட்சி பகுதியில் 3 மருத்துவ கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளன. பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சேகரி க்கப்படும் குப்பைகளை குலசேகரம் சந்தை பகுதி யில் கொட்டி வந்தார் கள். அந்த பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் உள்ள திற்பரப்பு பேரூராட்சிக்கு சொந்தமான திருநந்திகரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தார்கள். அந்த பகுதியிலும் பொது மக்கள் எதிப்பு தெரிவித்ததால் குலசேகரம் பேரூ ராட்சியினர் மாற்று இடம் தேடினார்கள்.

    மாவட்ட நிர்வா கத்தின் அனுமதி பெற்று பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சாணி பகுதியில் செயல்படும் பொன்மனை பேருராட்சி மூலம் செயல்படுத்தி வரும் இயற்கை உரம் தயாரிக்கும் பூங்காவில் கொட்டி வந்தார்கள்.

    குலசேகரம் பேருராட்சியில் இருந்து கொண்டு செல்லும் குப்பை களை கொட்ட அந்த பகுதி யில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இதனால் அடிக்கடி குப்பை வண்டிகளை மடக்கி சிறை பிடித்து வந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் குப்பை வண்டியை விடு வித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை குலசேகரம் பேருராட்சிக்கு சொந்தமான வண்டி குப்பைகளை ஏற்றி கொண்டு செல்லும்போது பொன்மனை பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்களும், பொதுமக்களும் சேர்ந்து பெருஞ்சாணி பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வண்டியை சிறைபிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், செயல் அலுவலர் லிசி, பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த னார்கள் அதன் அடிப்ப டையில் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டனர்.

    அதற்குள் குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும். அதுவரை இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதி தர வேண்டும் என்று கேட்டனர்.

    பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×