என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
- குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் இன்று.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, செயற்குழு உறுப்பினர் சதாசிவம், நேசமணியின் பேரன் ரஞ்சித்அப்பலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், ஒன்றிய செயலாளர் ஜெசீம், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நிர்வாகிகள் சுகுமாரன், சந்துரு, ஜெயகோபால், முருகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்