என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது
- வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது. 24-ந்தேதி காலை 6.15 மணிக்கும், 8 மணிக் கும் திருப்பலி நடக்கிறது
- ஆடம்ப ரக்கூட்டுத் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலேரியஸ் தலைமையில் நடக்கிறது
நாகர்கோவில்
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
இது குறித்து பேராலய பங் குதந்தை ஸ்டேன்லி சகாய சீலன், உதவி பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத்தலை வர் ஜேசுராஜா, செயலர் ராஜன், துணைச்செயலர் ராஜன் ஆராச்சி, பொருளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் நேற்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரி யார் பேராலயம் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது. 24-ந்தேதி காலை 6.15 மணிக்கும், 8 மணிக் கும் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து ஆடம்ப ரக்கூட்டுத் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலேரியஸ் தலைமையில் நடக் கிறது. 25-ந்தேதி காலை 5.30 முதல் 11 மணி வரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட் டுத்திருப்பலி நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் திருப் பலி, மாலையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நடக்கும். 8-ம் நாள் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி காலை முதல் மதியம் 12.30 மணி மரை திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி முன் னாள் ஆயர் பீட்டர் ரெமி ஜியூஸ் தலைமையிலும் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
2-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை ஆயர் நசரேன் சூசை தலைமை யில் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடக் கிறது.
10-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழாத்திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமை யில் நடக்கிறது. 8 மணிக்கு மலையாளத்திருப்பலியும், 11 மணிக்கு தேர்பவனி நடக் கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
8-ம் நாள் நடக்கும் தேர் பவனியில் சவேரியார், மிக் கேல் ஆண்டவர் தேரும், 9-ம் நாளில் சவேரியார். மாதா தேரும். 10-ம் நாள் தேர்பவனியின் போது சவேரியார், மாதா, மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார் ஆகிய 4 தேர் பவனி நடக்கிறது. திருவிழாவின் கடைசி 3 நாட்கள் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கிறோம்.
அவர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி, மருத்துவவ சதி, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும். சவேரி யார் பேராலயம் அருகே உள்ள மாநகராட்சிக்கட்டிட கழிப்பறையை பக்தர்கள் பயன்படுத்த இலவசமாக வழங்க மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள் ளோம். பக்தர்களின் வசதிக் காக இலவச பேருந்துகள் இயக்க போக்குவரத்து நிர் வாகத்திடம் மனு கொடுத் துள்ளோம்.
பாதுகாப்பு வழங்கு வது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருவி ழாவின் 10-ம் நாள் வருடந் தோறும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த வருடமும் 10-ம் திருவிழா 3-ந்தேதி வருகிறது. அன்று உள்ளூர் விடுமுறை விட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் துள்ளார் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்