search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுகுவலியால் அவதிப்பட்ட புற்றுநோயாளிக்கு பொன்ஜெஸ்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை
    X

    முதுகுவலியால் அவதிப்பட்ட புற்றுநோயாளிக்கு பொன்ஜெஸ்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை

    • வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம்
    • மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 74 வயது நோயாளி ஒருவர் ப்ராஸ்டேட் புற்றுநோயுடன் கடுமையான முதுகுவலி மற்றும் வயிறு வலியோடு அனுமதிக்கப்பட்டார்.

    அவரை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜேஷ் பரிசோதனை செய்தார். அதில் புற்றுநோய் தண்டு வடத்தில் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடுமையான முதுகுவலி மற்றும் இடுப்பு வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது.

    நோயாளிக்கு சி.டி. ஸ்கேன் உதவியுடன் (சுப்பீரியர் ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக்) எளிதாக செய்யப்பட் டது. ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸ் என்ற சிகிச்சை செய்வதன் மூலம் நாள் பட்ட இடுப்பு வலியினை குறைக்கலாம். இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முறையாக சி.டி.ஸ்கேன் வழிகாட்டுதலின் உதவியுடன் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×