search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

    • அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றும் சுஜிலா செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனை போலீசார் எடுத்து பேசினர். அப்போது பேசிய வாலிபர் கோபத்தில்தான் பேசியுள்ளார். இதனால் இந்த வாலிபர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×