search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் காளான் வளர்ப்பு பயிற்சி
    X

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் காளான் வளர்ப்பு பயிற்சி

    • காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்தின் தலைவர்களான புஷ்ப லதா மற்றும் சரண் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-கன்னியாகுமரி ஊரக வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி நிலையம்) கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியில் காளான் விதை உற்பத்தி, வளர்ப்பு, மதிப்பு கூட்டுப்பொருட்கள் செய்தல், அவற்றின் சிறப்பு அம்சங்கள், தொழில் வாய்ப்புக்கு தேவையான நிதியை பெறுதல் தொடர்பா னவற்றில் செய்முறை வகுப்புகள் ரோகிணி பொறியியல் கல்லூரியிலும், மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்திலும் நடைபெற்றது.

    இதில் முதலாமாண்டு வேளாண் துறை மாண வர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் அடைந்தனர். மேலும் இந்த பயிற்சியின் மூலமாக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் காளான் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×