search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    X

    தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    • கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.
    • பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.

    நாகர்கோவில் ;

    கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட் டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, ஊட்டச்சத்து கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்வானது கொண்டா டப்பட்டு வருகிறது. தொடர்ந்து குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் இந்த வருடம் தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்வானது ஊட்டச் சத்தான இந்தியா, கல்வி நிறைந்த இந்தியா மற்றும் வலுவான இந்தியா என்ற கருத்தின்கீழ் கொண் டாடப்படவுள்ளது.

    இந்நாட்களில் பொது மக்களுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஊட்டசத்து குறித்து கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கி யமான உடல்நிலையை அடை வது, ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியமான கருத்துக்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எடுத்து கூறுவது, சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சரியான தூய்மை, பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்க வழக்கங்களை எடுத்து கூற துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.

    மேலும் மாவட்டத்திற் குட்பட்ட ஒவ்வொரு வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து தரப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பதற்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஸ்ரீதர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்ததோடு, ஊட்டசத்து குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட வரு வாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி வன அலுவலர் (பயிற்சி) வித்யாதார், உசூர் மேலாளர் ஜூலியன் ஹூவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.]

    Next Story
    ×