search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திரகிரகணத்தையொட்டி பகவதி அம்மன் கோவிலில் 9 மணி நேரம் நடை அடைப்பு
    X

    சந்திரகிரகணத்தையொட்டி பகவதி அம்மன் கோவிலில் 9 மணி நேரம் நடை அடைப்பு

    • பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிகார பூஜை
    • விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிச னம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரக ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சந்திர கிரகணத்தை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்பட்டது.

    அதன்பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தி னுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    சந்திர கிரகணத்தினால் பகவதி அம்மன் கோவில் நடை 9 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு அம்மனுக்கு பரிகாரபூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பிறகு பகவதி அம்மனுக்கு வழக்கம்போல் உள்ள பூஜைகள் தொடர்ந்து நடத்தப் பட்டது. கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிச னத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

    இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகா னந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தான கோவிலில் சந்திர கிரகணத்தை யொட்டி மாலை 6 மணி முதல் நடை அடைக்கப்பட்டது. இந்த கோவிலில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×