search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்சிறை, நடைக்காவு பகுதியில்  நாளை மின்தடை
    X

    கோப்பு படம் 

    முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

    • மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளன.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, சென்னித்தோட்டம், மாமூட்டுக்கடை, விரிகோடு , கொல்லஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×