search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு
    X

    நாகர்கோவிலில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு

    • அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் நடைபெறும்
    • 120 ராணுவ வீரர்கள் வந்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணு வத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களிலிருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்கள் அனை வருக்கும் ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் ராணு வத்திற்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுவதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. பந்தல் அமைக்கும் பணி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவத்தின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அண்ணா விளையாட்டு அரங்கத்திற்குள் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.அங்கு இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இன்றி இரவு நேரத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறு கிறது. ராணுவ வீரர்கள் தேர்வு வருபவர்கள் அமரும் வகையில் உழவர் சந்தை திடல், அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி, மாநகராட்சி புதிய கட்டிட பகுதிகளில் ஷெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.தினமும் 3000 பேருக்கு நேர்முக தேர்வை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    தேர்வு குழுவினர் நேற்று இரவு அனைவரும் வந்து சேர்ந்தனர். திருவனந்தபுரம்,கோவை, சென்னையிலிருந்து 120 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் இங்கேயே முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×