search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
    X

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை படத்தில் காணலாம்.

    மீனாட்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

    • கழிவுநீர் ஓடைகள் சீரமைப்பு
    • கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் அதிரடி நடவ டிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோட்டார் போலீஸ் நிலையம் முதல் ஒழுகினசேரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. என்ற மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். மீனாட்சிபுரம் பகுதியில் கடையின் முன் பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அதை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்த அகற்றினார்கள்.கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த படிக்கட்டுகளும் இடித்து அகற்றப்பட்டது.

    மீனாட்சிபுரம் பகுதியில் கழிவு நீர் ஓடைகள் மணல் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கழிவுநீர் ஓடையில் கிடந்த மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து கழிவு நீர் ஓடையில்கிடந்த மணல்கள் அகற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட தையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×