search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் தந்தையை கம்பால் அடித்துக் கொன்ற மகன் கைது
    X

    ஆரல்வாய்மொழியில் தந்தையை கம்பால் அடித்துக் கொன்ற மகன் கைது

    • பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது
    • போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்த வர் பூதலிங்கம் (வயது 85). இவர் காலில் அடிபட்டு படுத்தபடுக்கையாக மகன் சுப்பையா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பூதலிங்கம் திடீரென இறந்தார். இது குறித்து அவரது மூத்த மகன் வேலாயுதம், ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி சுப்பையா, தந்தையுடன் தகராறு செய்து உள்ளார். என் தந்தை சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், சுப்பையாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடி போதையில் அவர் தந்தை பூதலிங்கத்தை கம்பால் தாக்கியதை ஒப்புக் கொண்டார். இதில் தான் பூதலிங்கம் இறந்துள்ளார் என தெரிய வந்தது.

    அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×