என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்
இரணியல் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
- காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பதாக தகவல்
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அடுத்த கக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 70). இவருக்கு சொந்தமான ஆலமூடு போற்றி குடும்ப கோவில் மேலகக்கோட்டில் உள்ளது.
சம்பவத்தன்று இரவு பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு கோவில் நடையை சாத்தி விட்டு ராமதாஸ் சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






