search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்களிடம் நகை பறித்தது ஒரே கும்பல்
    X

    கோப்பு படம் 

    2 பெண்களிடம் நகை பறித்தது ஒரே கும்பல்

    • நாகர்கோவிலில் அடுத்தடுத்து சம்பவம்
    • சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமவர்ம புரத்தைச் சேர்ந்தவர் மெல்பாராஜினி (வயது 51). இவர் நேற்று ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் மெல்பாராஜினியிடம் பேசி உள்ளனர். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் மூவேந்தர் நகரைச் சேர்ந்த லட்சுமி (44) சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் நேசமணி நகர் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×