search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை கோட்டத்துக் குட்பட்ட மார்த்தாண்டம், கருங்கல் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (4-ந்தேதி ) உயர்அழுத்த கம்பிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர் ஆகிய பகுதிகளுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதேபோன்று கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப் படும் கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இட விளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்க விளை, செல்லங்கோ ணம், முள்ளங்கனாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளி யாவிளை, படிவிளை, மா னான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன்கா லனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×