search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவித்து மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×