search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே 2 சுற்றுலா வேன்களின் கண்ணாடிகள் உடைப்பு
    X

    நாகர்கோவில் அருகே 2 சுற்றுலா வேன்களின் கண்ணாடிகள் உடைப்பு

    • உடையப்பன் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம்.
    • நள்ளிரவில் யாரோ சிலர் அந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியி ருப்பு மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாமக்கண்ணன்(வயது 52).

    இவர் தனது மனைவி அருணா பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக 2 வேன்களும் வைத்துள்ளார். இந்த வேன்களுக்கு சவாரி இல்லாத நேரத்தில், உடையப்பன் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம்.

    நேற்று இரவும் அவர் தனது வேன்களை சாலை யோரம் நிறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ சிலர் அந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து உள்ளனர். இன்று காலை அந்தப் பகுதி வழியாக சென்ற மக்கள் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள், திருநாம கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து வேன்களை பார்த்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேன் கண்ணாடிகளை உடைத்தது யார்? என்பது குறித்துஅந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×