search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்தாமரைகுளம் அருகே தீயில் கருகிய பெண் சாவு
    X

    தென்தாமரைகுளம் அருகே தீயில் கருகிய பெண் சாவு

    • மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
    • படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன்.

    இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீலா (வயது 52) மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.

    இதில் படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×