search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 50 அடி கிணற்றில் தவறி விழுந்த பெண்
    X

    நாகர்கோவிலில் 50 அடி கிணற்றில் தவறி விழுந்த பெண்

    • தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
    • நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி அமுதா (வயது 50).

    இவர் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அமுதா வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவு வீட்டி லிருந்த அமுதாவை காண வில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அமுதா வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அமுதாவை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கயிறு மூலமாக தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்த ளித்த அமுதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

    பின்னர் அவருக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அமுதா ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அமுதா கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×