search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது
    • சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார்.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே பொன்மனை மங்கலம் சாணல்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 56) தொழிலாளி. இவருக்கு சந்திரகலா (50) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இவர் ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் மனைவி வெளியே வேலைக்கு சென்று இருந்தார்.இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஜாண்சன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார். சந்திரகலா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×