என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி முகாம்
- நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.
பேராவூரணி:
பேராவூரணியில் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்களுக்கான தகுதி பட்டைய தேர்வு, திறனாய்வு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய தலைமை பயிற்சியாளர் குப்பன் தலைமை தாங்கினார்.
கராத்தே பள்ளியின் பெற்றோர்கள் சங்க தலைவர் முருகையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜசேகரன், ரென்சி எம். சிவசாமி, சிகான் பி.மணிசங்கர், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி கே.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கராத்தே மற்றும் சிலம்ப மாணவர்களை உருவாக்கி சேவைகளை செய்துவரும் ரென்சி கே.பாண்டியனை, முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். முடிவில் சென்சாய்
ஆர்.அரவிந்த் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்