search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி முகாம்
    X

    மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

    மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி முகாம்

    • நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்களுக்கான தகுதி பட்டைய தேர்வு, திறனாய்வு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய தலைமை பயிற்சியாளர் குப்பன் தலைமை தாங்கினார்.

    கராத்தே பள்ளியின் பெற்றோர்கள் சங்க தலைவர் முருகையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜசேகரன், ரென்சி எம். சிவசாமி, சிகான் பி.மணிசங்கர், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி கே.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கராத்தே மற்றும் சிலம்ப மாணவர்களை உருவாக்கி சேவைகளை செய்துவரும் ரென்சி கே.பாண்டியனை, முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். முடிவில் சென்சாய்

    ஆர்.அரவிந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×