search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
    X

    கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

    • கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது

    கரூர்

    கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், மேலூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த குழாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மாயனூர் ரெயில்வே கேட்டு அருகே திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதியில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. பின்னர் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×