search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு
    X

    குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

    • குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லுாரியில் எக்ஸ்னோரா, பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுமம் சார்பில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர் வளத்துறை பொறியாளர் ராஜகோபால் கருத்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து நீர் நிலைகள் பராமரிப்பில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் நீர்வளத்துறை முன்னாள் பொறியாளர் சேகர், தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன், திருச்சி எக்ஸ்னோரா மண்டல தலைவர் விமல் ராஜ் கருத்துரை வழங்கினர். இதில் கல்லுாரி எக்ஸ்னோரா மாணவர்கள், பிற துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×