search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
    X

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு

    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

    கரூர்:

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், பேச்சிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் வேறு தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயா ரிக்கின்றனர். தயார் செய்யப் பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை. செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,180 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், 1,200 ரூபாய் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன், 2,400 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    Next Story
    ×