என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாந்தோணிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- தாந்தோணிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது
கரூர்:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள துணைமின் நிலையத்தில் தாந்தோணிமலை பீடர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் சஞ்சய் நகர் பீடர் மற்றும் ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் பி.கே.பாளையம் பீடர் ஆகியவற்றில் மேம்பாட்டு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காளியப்பனூர் கிழக்கு, மலைப்பட்டி, தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் 1,2,3-வது கிராஸ், சத்தியமூர்த்தி நகர், ராமசந்திரபுரம், சிவசக்திநகர் கிழக்கு, காவேரி நகர், சுங்ககேட், குமரன் சாலை, வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், சஞ்சய் நகர் காவல் குடியிருப்பு, முனியப்பன் கோவில். திருக்காம்புலியூர், ஆத்தூர் பிரிவு, நெரூர் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.






