என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
- மலர்களால் சிறப்பு அலங்காரம் தீபாராதனை
- பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம்
கரூர்,
கரூர் காகிதபுரம் குடியிருப்பில் காசி விஸ்வநாதர் கோவிலில், பிர தோஷத்தை ஒட்டி, நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகை யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை நடந்தது. நன்செய் புகழூர் மேகபாலீஸ் வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திர வியங்களால் அபிஷேகம் செய்யப் பட்டது. பின், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. க்தர்கள் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






