search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருமணமான புது பெண்ணை கடத்தி சென்ற காதலன்
    X

    திருமணமான புது பெண்ணை கடத்தி சென்ற காதலன்

    • தடுத்த கணவரின் தந்தை, தாய் மீது தாக்குதல்
    • கரூரில் பரபரப்பு

    கரூர்,

    கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கார்த்திக் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற 21 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்த விவகாரம் ெபண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, தேவச்சி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார வாலிபர் சூரியா என்பவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சினேகாவிற்கும் சூரியாவிற்கும் பழனியில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியினர் தேவச்சி கவுண்டன் புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் காதலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்து கார்த்திக் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் தனது அண்ணன் சக்திவேல், மற்றும் குளத்துப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை அழைத்து கொண்டு தேவச்சி கவுண்டன் புதூரில் உள்ள காதலியின் கணவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த தனது காதலியை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இதனை சூரியாவின் தந்தை பழனிச்சாமி மற்றும் சினேகாவின் தாயார் புஷ்பா மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்றனர், அவர்களை கடத்தல் கும்பல் தாக்கினர். இதில் காயம் அடைந்த பழனிச்சாமி, புஷ்பா ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சினேகா மற்றும் கார்த்திக்கை வலை வீசி தேடிவருகின்றனர். திருமணமான பெண்ணை காதலன் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×