search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் அருகே வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற போது சிக்கிய திருடன்
    X

    நொய்யல் அருகே வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற போது சிக்கிய திருடன்

    • இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர்
    • தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாதகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே குடியிருந்து வருபவர் பொன்னுசாமி. இவரது மகன் பிரதிவிராஜ்(வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. நேற்று இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர். அப்போது மூன்று வாலிபர்கள் பிரதிவிராஜின் வீட்டு கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். மூன்று வாலிபர்கள் வீட்டுக்குள் புகுவதை பார்த்த அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்து ஓடி வந்து சத்தம் போட்டுள்ளன. சத்தம் கேட்டதும் மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடி உள்ளனர். வீட்டை சுற்றி கம்பிவேலி போடப்பட்டு இருந்ததால் 2 பேர் கம்பி வேலி தாண்டி தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×