search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேசிய அளவில் கோ கோ போட்டி - கோவூர் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளி முதலிடம்
    X

    தேசிய அளவில் கோ கோ போட்டி - கோவூர் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளி முதலிடம்

    • சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிளான கோ கோ போட்டி
    • 17 வயது பிரிவில் கோவூர் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளி முதலிடம்

    வண்டலூர், ரத்தினமங்கலத்தில் உள்ள ஸ்ரீ கிரீஷ் இண்டர்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவில் கோ கோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து 800 பள்ளிகளை சார்ந்த 10000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    14,17,19 வயது என மூன்று பிரிவின் கீழ் 4 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 19 வயது பிரிவில் என்.கே.வி.வித்யாலயா பள்ளியும் ,17 வயது பிரிவில் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளியும், 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயாவும் முதலிடம் பிடித்தது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சுந்தர் மற்றும் பள்ளித் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசு கோப்பையை வழங்கினர்.இதில் பள்ளி தாளாளர் கவுரி கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் ஜெயகார்த்திக் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×