search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரக்கோவில் கும்பாபிஷேகம்
    X

    கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    குமரக்கோவில் கும்பாபிஷேகம்

    • குமரக்கோவிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்.
    • நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 36ஆண்டு களுக்குப் பிறகு கும்பாபி ஷேகம் நடைபெ ற்றது.

    முன்னதாக கடந்த, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் நான்கு காலையாக சாலை பூஜைகள் நடைபெற்றது

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேளதாளம் முழங்க கோவிலை பலம் வந்தது கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி கள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை பீடாதிபதி சுவாமிகள், கோவில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலர் செல்வநாயகம், சியாமளா பெண்கள் பள்ளி செயலர் முரளிதரன் டாக்டர் முத்துக்குமார் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், முன்னாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, மதிமுக மாவட்டச் செயலாளர் மார்க்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, வள்ளி முத்து, நித்யா தேவி பாலமுருகன், ராஜேஷ், கவன்சிலர் பாலமுருகன் தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பி ரமணியன், கியான்சந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×