search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடைவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் சுடலைமாடசுவாமி

    குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடைவிழா

    • குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி 60 பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட குரங்கணி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும், அதை தொ டர்ந்து மதியக்கொடையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெ ற்றது. இரவு 7மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.கொடை விழாவிற்கான ஏற்பாடு களை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    விழாவில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முத்து மாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திர சேகரன், கல்யாண சுந்தரம், ஜெயசங்கர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன் மற்றும் செல்வராஜ், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய முருகன், ராஜாராம், குணசேகரன், ரவி, முத்துக்குமார், பெரியசாமி, ராகவன், கேசவ மூர்த்தி, முத்து லிங்கம், ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×