search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

    • திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
    • ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப. கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது53) கூலித்தொழிலாளி.

    இவர் இரவு திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.

    அப்போது எதிரே வந்த மருங்கூர் நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராம்குமார் (22) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜசேகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் ராஜசேகரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எதிரே மோட்டார் சைக்கிள் வந்த ராம்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×