search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி
    X

    ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி

    • ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது,
    • பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கே.கே.நகர் 3-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் (40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான கார்த்திகை ராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 4 பேரும், தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

    இதை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு லாபத்தில் பங்கு தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×