search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
    X

    பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது

    • பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாண்டி (31), சிவனாண்டி (60), தங்கேஸ்வரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிகுண்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 50). இவரது கணவர் சந்திரன். இவர் அங்கு உள்ள ஒரு கோவிலில் மேளக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிலர், கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது முதல் மரியாதை கேட்டதாக தெரிகிறது. இதற்கு போதும்பொண்ணு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. படுகாயமடைந்த போதும்பொண்ணு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பெரியபாண்டி, அவரது மகன் பால்பாண்டி, மகள் ஜோதி, பெரிய பாண்டி சகோதரர் சின்னபாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி, பெரியபாண்டி மனைவி பொன்னுத்தாய், நீலமேகம் மகள் மீனாட்சி ஆகிய 8 பேரிடம் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×