search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேருக்கு கத்திக்குத்து
    X

    3 பேருக்கு கத்திக்குத்து

    • மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழைய விளாங்குடி, செம்பருத்தி நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 28). இவரது நண்பர் காசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. அருண் பாண்டியன், காசி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு விளாங்குடி நேருஜி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த யுவராஜ் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக அருண் பாண்டியன், கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜை தேடி வருகின்றனர்.

    மதுரை முல்லை நகர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பை சேர்ந்தவர் இளையராஜா (42). அந்தப் பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. சம்பவத்தன்று இளையராஜா வீட்டின் முன்பு 3-க்கும் மேற்பட்டோர், நின்று சத்தமாக பேசிக் கொண்டு இருந்தனர் இதனை இளை யராஜா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளையராஜாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக இளையராஜா தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பி.பி குளம் நேதாஜி மெயின் ரோடு, செல்லபாண்டி மகன் ஜோதிபாசு (வயது 19), முல்லைநகர் செல்வராஜ் மகன் கணேசன் (வயது 20), பி.பி.குளம் இந்திரா நகர், முனியாண்டி கோவில் தெரு வேல்முருகன் மகன் பொன்பாண்டி (வயது 21) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×