என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசும்பொன் பாண்டியன்
தீவிரமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த கோரிக்கை
- மதுரையில் தீவிரமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- போதிய மாத்திரைகள், மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உயிரி ழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அறிகிறோம்.
மதுரையில் ஒரு நாளில் 3குழந்தைகள் 4சிறுவர்கள் மொத்த 15பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.
தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பாதிப்பு அதனால் பாதாளச் சாக்கடை பாதிப்பு குடிநீரில் சாக்கடை கலப்பது போன்ற வைகள் நடைபெறுகிறது.
மேலும் பாதாள சாக்கடை பதிப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சாலை ஓர தெருக்களில் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.
மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதும் மழை போல் தேங்கும் குப்பைகளால் தொற்று நோய்கள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மதுரையில் முக்கிய கால்வாய்க ளான சிந்தா மணி, கிருது மால், பந்தல்குடி, அனுப்பானடி மற்றும் பனையூர் உள்ளிட்ட முக்கிய கால் வாய்கள் பல ஆண்டு களாக தூர்வாரப்படா மல் உள்ளது.
இந்த கால்வாய்களில் கழிவு சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் வாய்க்கால் ஆக்கிரமித்து உள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகம் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
மதுரை மாநகரில் உள்ள பிரதான கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மூலம் டெங்கு பாதித்த பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை எடுத்து தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தினசரி வருதை உறுதிப் படுத்த வேண்டும். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற வற்றை பொது மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் போதிய மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவை தேவை யானதுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
மதுரை மாநகரில் மற்றும் புறநகரிலும் திடீர் காய்ச்ச லால் மக்கள் அவதிப்படு வதை மருத்துவ சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்து பொது மக்களின் அச்சத்தை தவிர்த்திடும் வகையில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.






