search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
    X

    கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

    • கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பெருமாள் (வயது 27). இவர் தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது‌.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியுடன் தந்தை பெரியார் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெருமாள் அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மிதந்த பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×